மதுரை: வைகை அணையை தூர்வார ரூ.2.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வைகை அணையை தூர்வார உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் 40 அடிக்கு கீழ் குறைந்ததும் முழுமையாக தூர்வாரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.