மதுரை : வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவு என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆறுகள் இணைப்பில் அரசுதான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறிப்பிட்டுள்ளது. வைகை, காவேரி, குண்டாறை இணைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.