Thursday, May 16, 2024
Home » நெல்லை உவரி தூண்டில் பாலம் அருகில் தரை தட்டிய விசைப்படகு: மீனவர்களின் பெறுமுயற்சிக்கு பின்னர் மீட்பு

நெல்லை உவரி தூண்டில் பாலம் அருகில் தரை தட்டிய விசைப்படகு: மீனவர்களின் பெறுமுயற்சிக்கு பின்னர் மீட்பு

by Lavanya

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் உவரி அருகே கடலில் தூண்டில் பாலம் அருகில் தரைதட்டி நின்ற விசை படகை மீனவர்கள் பெறுமுயற்சிக்கு பின்னர் மீட்டு சென்றனர். தூத்துக்குடி திரேஸ் புறத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடந்த 1ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு தங்கள் பிடித்த மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகளை வாங்குவதற்காகவும், உணவு பொருட்களை வாங்குவதற்கும், உவரி அருகே வந்துள்ளனர்.அப்போது உவரி பகுதியிலுள்ள கடலின் ஆழம் குறித்து சரியாக தெரியாததால் விசைப்படகு தூண்டில்பாலம் அருகே வந்த போது தரைதட்டி நின்றது. பெறுமுயற்சிக்கு பின்னர் மேலும் இரண்டு படகுகளின் உதவியுடன் தரைதட்டி நின்ற விசைப்படகு மீட்கப்பட்டது. இதனிடையே உவரிக்கு வந்த ராதாபுரம் மீன்வளத்துறை காவல் உதவி ஆய்வாளர் விசைப்படகில் வந்த மீனவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

You may also like

Leave a Comment

four + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi