உத்தராகண்ட்: உத்தரகாசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மாற்று வழியில் மீட்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆகர் இயந்திரத்தை கொண்டு துளையிடும் பணியில் இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாற்று வழியில் மீட்புப் பணிகளை தொடங்குவது குறித்து பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்பகுதி வரை துளையிட்டு மீட்புப் பணியை தொடர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.