நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வரும் 23ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. மலர்கண்காட்சியை பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, 10 வயது கீழ் உள்ள சிறார்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.