உதகை: உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் இருவரை கைது செய்துள்ளனர். டிச.21-ம் தேதி தனியார் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. கம்பியால் சுருக்கு வைக்கப்பட்டு சிறுத்தை இறந்ததை உறுதி செய்த வனத்துறையினர் தனிக்குழு அமைத்து விசாரணை. தீட்டுக்கல் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), மாரி (50) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.