நீலகிரி: உதகை அருகே மசினகுடியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏராளமான மூங்கில் மரங்கள் எரிந்து சாம்பலாகின. ஆச்சக்கரையில் சுமார் 50 உயரத்துக்கு காட்டுத்தீ பற்றி எரிந்த நிலையில் தனியார் விடுதியில் இருந்த மரவீடு எரிந்தது. காட்டுத்தீயை வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் யாரேனும் தீ வைத்தார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.