Friday, May 17, 2024
Home » அமெரிக்காவின் மெய்னி மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவின் மெய்னி மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

by MuthuKumar
Published: Last Updated on

வாஷிங்டன்: அமெரிக்காவின் மெய்னி மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் தப்பியோடியுள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் பாரில் நுலைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், தாக்குதல் நடத்தியவர் அப்பகுதியில் உள்ள உணவகம் மற்றும் வால்மார்ட் சங்கிலி கடை போன்ற மற்ற இடங்களுக்குச் சென்று அங்கு அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் சிலர் மிக மோசமானலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து மெய்னி கவர்னர் ஜேனட் மில்ஸ், செனட்டர்கள் அங்கஸ் கிங் மற்றும் சூசன் காலின்ஸ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ஜாரெட் கோல்டன் ஆகியோரிடம் ஜனாதிபதி தனித்தனியாக தொலைபேசியில் பேசினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

20 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi