சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற் கட்டமாக குரோம்பேட்டை பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடத்துனர்களுக்கு யுபிஐ, கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையில் டிக்கெட் வாங்கும் புதிய கையடக்க கருவிகள் தரப்பட்டுள்ளன.