Friday, May 24, 2024
Home » அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

by Arun Kumar

பூந்தமல்லி: வானகரம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் பலியானார். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை வானகரம் ஓடமா நகர் அருகே, நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது புழல் நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்து போன நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi