புதுடெல்லி: சண்டிகர் பல்கலை கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான சத்னம் சிங் சந்து மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “சண்டிகர் பல்கலை கழக நிறுவனர் – வேந்தர் சத்னம் சிங் சந்துவை மாநிலங்களவை எம்.பியாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
ஒரு விவசாயியின் மகனான சந்து கல்வி கற்க போராடினார். ஆனால் இறுதியில் இந்தியாவின் கல்வியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். 2001ம் ஆண்டு மொகாலியின் லாண்ட்ரானில் சண்டிகர் குழும கல்லூரிகளை நிறுவியதற்கும், 2012ல் சண்டிகர் பல்கலை கழகத்தை உருவாக்கியதற்கும் ஒரு விவசாயியான சத்னம் சிங் சத்து பெருமை சேர்த்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சந்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.