கவுகாத்தி: அசாம் அரசு எத்தனை தடைகளை போட்டாலும் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அசாம் அரசும் அமித்ஷாவும் ஒற்றுமை பயணத்துக்கு தடை போட்டு விளம்பரத்தை ஏற்படுத்தி தருகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவே அசாம் அரசு ஒற்றுமை பயணத்துக்கு அனுமதி மறுக்கிறது.