Tuesday, May 14, 2024
Home » ஒன்றிய உள்துறை செயலாளர் பல்லாவுக்கு 4முறை பதவி நீட்டிப்பு

ஒன்றிய உள்துறை செயலாளர் பல்லாவுக்கு 4முறை பதவி நீட்டிப்பு

by Karthik Yash

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு 4வது முறையாக ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு அளித்துள்ளது. கடந்த 1984ம் ஆண்டு பிரிவு ஐஏஸ் அதிகாரியான அஜய் குமார் பல்லா ஒன்றிய உள்துறை செயலாளராக 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 60 வயதை எட்டியதால் அவர் 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், 2020 அக்டோபரில் அவருக்கு ஓராண்டுக்கு அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது. அதன் பின்னர் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இரண்டு முறை பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 2024 ஆகஸ்ட் 22ம் தேதி வரை 4வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கி நியமனங்களுக்கான அமைச்சரவை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலின் போதும்அவர் பதவியில் இருப்பார் என வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே, கேபினெட் செயலாளர் ராஜிவ் கவுபாவுக்கு அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi