சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் மக்கள் நல அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் மீது ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையில் வரும் 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளது. தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், புதுடெல்லி என பல மாநிலங்களிலும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுத்து வைத்து, கூட்டாட்சி தத்துவத்தை தொடர்ந்து சிதைத்து வரும் நிலையில், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ள இப்போராட்டத்தை மதிமுக வரவேற்கிறது. பாராட்டுகிறது. மதிமுக நிர்வாகிகள் இப்போராட்டத்தினை ஆதரித்து உரையாற்றுவார்கள்.