டெல்லி: டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளனர். நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து ஒன்றிய அரசு திட்டத்தை கைவிட்டது. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக 3 இடங்களில் நிலக்கிரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பை அடுத்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இடங்களின் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் 3 இடங்கள் நீக்கியுள்ளனர்.