Tuesday, April 30, 2024
Home » ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் போட்டி!!

ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் போட்டி!!

by Porselvi

புதுடெல்லி: ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்தத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

*தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவர் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிமுகவின் ஜெயவர்த்தன் ஆகியோருக்க எதிராக களம் காண்கிறார்.

*ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

*அருணாச்சலப் பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, களம் காண்கிறார்.

*ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சரான சர்பனாதா சோனோவால், அசாமின் திப்ருகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

*உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் தொகுதியில், ஒன்றிய அமைச்சர் சஞ்சீவ் பலியன் களத்தில் உள்ளார்.

*ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து களத்தில் உள்ளார்.

*ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேந்திர யாதவ், ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் களம் காண்கிறார்.

*ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

You may also like

Leave a Comment

1 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi