சென்னை: காவிரி பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு துரோகம் மட்டுமே செய்துள்ளதாக ஓ.எஸ்.மணியன் குற்றம் சாட்டினார். நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி செய்யும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சனை செய்கின்றன எனவும் கூறினார்.