மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிளவர் ஷீலாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணையின்போது வழக்கு குறித்த ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளரை ஆஜர்ப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.