உளுந்தூர் பேட்டை: உளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காவலர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். காரின் வலது பக்க டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.