இங்கிலாந்து: பாலஸ்தீன ஆதரவு பேரணி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா, தமிழகத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த தாயான உமாவிற்கும், கோவாவில் கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோரின் மகள் ஆவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா 2022 அக்டோபர் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் சர்ச்சை கருத்து:
இஸ்ரேல் – ஹமாஸ் சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அவ்வாறு தான் பிரிட்டனிலும், கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. அச்சமயம் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டும் போலீஸ் அனுமதி தருவதாக சுயெல்லா கூறியது சர்ச்சையானது. பாலஸ்தீன எதிர்ப்பு பேரணிக்கு பிரிட்டன் போலீஸ் அனுமதி அளிக்க மறுப்பதாகவும் சுயெல்லா கூறியிருந்தார்.
சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்:
சுயெல்லாவின் கருத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். முதலில் அமைச்சரவையில் இருந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நீக்க மறுத்தார். இந்நிலையில், அழுத்தம் வலுப்பெற்றதால் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். சுயெல்லாவின் கருத்துகள் சர்ச்சையானதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அவரை பதவிநீக்கம் செய்தார். உள்துறை அமைச்சரை அதிரடியாக நீக்கியுள்ள பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.