டெல்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது குறிப்பிடத்தக்கது.