தைபே: தைவானில் வீசி வரும் கொய்னு சூறாவளியில் சிக்கி ஒருவர் பலியானார். 300 பேர் காயமடைந்தனர். தைவான் நாட்டை கொய்னு என பெயரிடப்பட்ட சூறாவளி புயல் தாக்கியது. ஆர்க்கிட் தீவில் சூறாவளியால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை தூக்கி வீசப்பட்டன. படகுகளும் சேதமடைந்தன சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 300 பேர் காயமடைந்துள்ளனர். கனமழை, சூறாவளி காரணமாக விமானம் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தைவானில் கொய்னு சூறாவளி கோரதாண்டவம்
previous post