சென்னை: இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஆவடி ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழிதடத்தை திறந்து வைத்து ஆவடி ஆணையர் சங்கர் பேட்டியளித்தார். மீஞ்சூரில் இருந்து பொன்னேரி பஞ்செட்டி சாலை வழியே துறைமுகம் செல்லும் வாகனங்களுக்கு வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது.