தூத்துக்குடி: எகிப்தில் இருந்து நேற்று உரம் ஏற்றிக்கொண்டு வந்த இழுவை கப்பல் தூத்துக்குடி துறைமுக வாயிலில் தரை தட்டி நின்றது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வாயிலில் தரை தட்டி நிற்கின்ற இழுவை கப்பலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எகிப்து நாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு MV Genco Predator என்ற கப்பல் உரம் ஏற்றிவந்தது.