Sunday, June 16, 2024
Home » டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு: காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு!

டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு: காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு!

by Francis

சென்னை: டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசர் வழக்கு பதிவு செய்தனர். டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே டிடிஎஃப் வாசன் இரண்டு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 30ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

TTFVasan-extendedcourtcustody-3rdtime-Kanchipuramcourtorders

You may also like

Leave a Comment

3 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi