Tuesday, May 21, 2024
Home » லாரி டயர் வெடித்து வானில் பறந்து விழுந்து உரிமையாளர் பலி: வீடியோ வைரல்

லாரி டயர் வெடித்து வானில் பறந்து விழுந்து உரிமையாளர் பலி: வீடியோ வைரல்

by Dhanush Kumar

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஆலத்தூர் ரெட்டிப்பாளையம் ஆலாவரி காடு பகுதியில் லாரி தொழில் செய்பவர் ராஜ்குமார்(34). இவர் நேற்று முன்தினம் மாலை சங்ககிரி ஏடிசி டிப்போ எதிரில் உள்ள ஒரு ஆட்டோ டீசல் ஒர்க் ஷாப்பில் லாரியை பராமரிப்பு பணிக்காக விட்டிருந்தார். அங்கு, வேலை செய்யும் மோகனசுந்தரம்(60), லாரி டயரை கழற்றி பரிசோதித்து மாட்டிக் கொண்டிருந்தார். ஆனால், டிஸ்க்கில் சரியாக பொருத்தாததால் டியூப்பில் காற்று நிரப்பிய போது திடீரென பிய்த்துக்கொண்ட டயர் சுமார் 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில், மோகனசுந்தரம் படுகாயமடைந்தார்.

சத்தம்கேட்டு அப்பகுதியில் நின்றிருந்த ராஜ்குமார், அவரை காப்பாற்றுவதற்காக ஓடிச்சென்றார். அப்போது, மேலே பறந்து சென்ற டயர் வந்து அவரது கழுத்தின் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். மோகனசுந்தரம் சிகிச்சை பெற்று வருகிறார். டயர் 50 அடி உயரம் பறந்து சென்று ராஜ்குமார் மீது விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

You may also like

Leave a Comment

19 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi