திருச்சி: திருச்சியில் நடைபெற்று வரும் விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் 33 தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டும். இந்தியாவின் 2வது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது, காற்று மாசு காரணமாக மனிதர்கள் சுகாதாரத்தோடு வாழக்கூடிய இடமாக அது இல்லை. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை மற்றும் நாடாளுமன்ற கட்டடம் அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.