திருச்சி: திமுக துணை பொது செயலாளரான கனிமொழி எம்பி குறித்து சமூக வலைதளங்களில் திருச்சியை சேர்ந்த ஒருவர் அவதூறு கருத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் வட்ட திமுக செயலாளர் ஹரிஹரன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் உறையூர் சத்யா நகரை சேர்ந்த பாஜ பிரமுகரான சீனிவாசனை (66) நேற்று கைது செய்தனர்.