திருச்சி: திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.79.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம் எனக்கூறி சந்திரசேகரனிடம் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.