திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. 52 சவரன் தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். செப்.23ம் தேதி நடந்த கொள்ளை தொடர்பாக கணவன் தேஜா, மனைவி அபிநயா, ஏசுதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.