கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘கடலூர் நமக்கு ஒன்றும் புதியதல்ல. என் சகோதரியை திருமணம் செய்து இங்கு வந்த காலத்தில் இருந்து கடலூருக்கு நாங்கள் பலமுறை வந்திருக்கிறோம். கடலூர் மாவட்டம் கேப்டனின் கோட்டை என்று நிரூபித்தவர்கள் நமது தொண்டர்கள். வேட்பாளர் சிவக்கொழுந்து கேப்டனின் விசுவாசமானவர். இது சாதாரண கூட்டணி இல்லை.
மக்கள் விரும்பும் கூட்டணி. ஒட்டுமொத்த தொண்டர்கள் விரும்பும் கூட்டணி. நாளை சரித்திரம் படைக்க போகும் கூட்டணி. நீங்கள் உங்கள் வாக்குகள் மூலம் நிச்சயமாக நிரூபிக்க வேண்டும். வேட்பாளர் சிவக்கொழுந்து நாடாளுமன்றத்துக்கு சென்று உங்கள் குரலாக ஒலிப்பார். இனியும் எங்கள் வாழ்க்கை உங்களுக்காக மட்டும் தான். விஜயகாந்த் வழியிலேயே நாங்களும் பயணிப்போம். கடலூர் தொகுதியில் மச்சானும் பச்சானும் போட்டியிடுகின்றனர். இந்த பாச்சா இங்கு பலிக்காது’ என்றார்.