சென்னை:கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் வார இறுதியையொட்டி நேற்று முன்தினம் இரவு ஏராளமான பயணிகள் குவிந்தனர். பேருந்துகள் சரிவர வராததால் பயணிகள் நள்ளிரவு ஒரு மணி முதல் நேற்று அதிகாலை வரை ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் அனைத்து பேருந்துகளையும் அங்கு வர வைத்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.