சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 11 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.