சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும் 6ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.