கடலூர்: விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சிக்னல் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்டில் டாடா ஏஸ் வாகனம் மோதியதால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளது. சிக்னல் பழுதால் குருவாயூர்-சென்னை விரைவு ரயில், எழும்பூர்- காரைக்குடி ரயில்கள் நிறுத்தப்பட்டன, சிக்னல் பழுதை சரிசெய்த பிறகு இரண்டு ரயில்களும் அரை மணி நேரம் தாமதாக இயக்கப்பட்டது.