Sunday, May 12, 2024
Home » பரங்கிமலை மையத்தில் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா அணிவகுப்பு: விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி பார்வையிட்டார்

பரங்கிமலை மையத்தில் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா அணிவகுப்பு: விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி பார்வையிட்டார்

by Ranjith

சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்த 184 ஆண்கள், 36 பெண்கள் மற்றும் உகாண்டா, சிசில்ஸ், மலேசியா, லசாத்தோ போன்ற நட்பு நாடுகளை சேர்ந்த 6 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 229 இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி போன்றவை அங்குள்ள பரமேஷ்வர் திடலில் நடந்தது.
விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சிறந்த அணிவகுப்பு நடத்திய சவுரியன் தாபாவுக்கு தங்கப்பதக்கமும், ஒட்டுமொத்த பரிசான வீரவாள் மற்றும் வெள்ளி பதக்கம் ஆர்யன் ஷாஹிக்கும், வெண்கலப்பதக்கத்தை தமிழ்நாட்டை சேர்ந்த சரண்யாவிற்கும் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி வழங்கி பாராட்டினார். இதைதொடர்ந்து பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள் மிடுக்கான நடையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். 3 ஹெலிகாப்டரில் இருந்து வண்ண மலர் தூவப்பட்டது.

வெளியே வந்த இளம் ராணுவ அதிகாரிகள் தங்களது துப்பாக்கிகளை உயர்த்தி கோஷ மிட்டனர். ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். பின்னர் இளம் ராணுவ அதிகாரிகளின் தோள்பட்டையில் மூடப்பட்டிருந்த நட்சத்திர சின்னத்தை அவர்களின் பெற்றோர்கள் திறந்து பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

You may also like

Leave a Comment

seventeen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi