Friday, May 17, 2024
Home » போதை தகராறில் விபரீதம்; நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளிய வாலிபர் கைது

போதை தகராறில் விபரீதம்; நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளிய வாலிபர் கைது

by Neethimaan

வளசரவாக்கம்: கோயம்பேடு மார்க்கெட்டில் போதை தகராறில், நண்பனை தாக்கி மாடியில் இருந்து கீழே தள்ளியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிவகுமார் (27) மற்றும் தேவேந்திரன் (27). நண்பர்களான இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்ததும் இவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மொட்டை மாடியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, இவர்களிடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த தேவேந்திரன், சிவகுமாரை சரமாரியாக தாக்கி, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் சிவகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தேவேந்திரனை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi