ஆலந்தூர்: நங்கநல்லூர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் வரதராஜ் (50), காய்கறி வியாபாரி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர், காய்கறி கடையை சரிவர திறக்காததால், குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீராம் காலனியில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு சென்ற அவர், அங்குள்ள ஊஞ்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.