கொடைக்கானல்: கோடை விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நகரில் குவியும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை சீசன் களை கட்டி வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நகரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. நகரில் குவிந்து வரும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே கொடைக்கானலில் சில தினங்களாக பகலில் நல்ல வெயில் அடித்து வருகிறது. இது இதமான சூழ்நிலையை ஏற்படுத்துவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.