Friday, May 3, 2024
Home » ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கு இன்று முதல் நிலை தேர்வு: இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கு இன்று முதல் நிலை தேர்வு: இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்

by Neethimaan

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 21 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான(2023ம் ஆண்டுக்கான) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 1ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 7 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு மே 28ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 73 நகரங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடக்கிறது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

two + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi