சென்னை : சென்னை திருவொற்றியூர் எம்.ஜி.ஆர்.சாலையில் கத்தியால் குத்தி 55 வயது நபர் மற்றும் மனோஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். திருவொற்றியூர் எம்.ஜி.ஆர் சாலையில் கோழிசெல்வம், மனோஜ் ஆகியோர் மதுபானம் வாங்கச் சென்றுள்ளனர். கத்தியை வைத்து இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென கோழி செல்வம் குத்தியதில் மனோஜ் படுகாயமடைந்தார். சம்பவத்தை கண்டவுடன் சத்தம் எழுப்பிய 55 வயது முதியவரையும் கத்தியால் குத்தினார் கோழி செல்வம்.