திருவாரூர்: ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வந்தடைந்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை தமிழ்நாடு அமைச்சர்கள் வரவேற்றனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் புத்தகத்தை பரிசளித்து வரவேற்றனர். திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தேஜஸ்வி யாதவ் வந்துள்ளார்.