தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் பழுது ஆனதால் தீவிர சிகிச்சை பிரிவு நேயாளிகளுக்கு பொது பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு செயற்கை சுவாச கருவிகள், வென்டிலேட்டர் உள்ளிட்டவை வைக்க முடியாமல் அவதி ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரை சரி செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.