Tuesday, May 21, 2024
Home » திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்

திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்

by Karthik Yash

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்தார். திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் ரயில் நிலையம் அருகே நகரச் செயலாளர் ஜி.கந்தசாமி, ஆயில் மில் பேருந்து நிறுத்தத்தில் அம்மா பேரவை நகரச் செயலாளர் எம்.ஜோதி, தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நகர இளைஞரணி செயலாளர் எஸ்.வேல்முருகன், வட்டாட்சியர் அலுவலகம் அருகே வி.ஆர்.குமரேசன், பஸ் நிலையம் அருகே எம்.எழிலரசன் ஆகியோர் ஏற்பாட்டில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு பழரசம், தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரி, எலுமிச்சை ஜூஸ், கிர்ணி பழங்களை வழங்கினார்.இதில் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வழக்கறிஞர் ராம்குமார், பாலாஜி, நாகம்மாள், சங்கர், சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சித்ரா விஸ்வநாதன், வார்டு செயலாளர்கள் சரவணன், விஜயராகவன், ராமன், பிரேம்குமார், டில்லிபாபு, லட்சுமி சுரேஷ், பிரியங்கா, கோடீஸ்வரி, திலகவதி, அனீஸ் ராஜா, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

one + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi