திருப்பூர்: திருப்பூரில் மதிமுக அவைத் தலைவர் துரைசாமி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மதிமுகவை திமுகவுடன் இணைக்கக் கோரி வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அவைத் தலைவர் துரைசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடிதம் எழுதியுள்ள நிலையில், வைகோவின் பதிலுக்காக தான் காத்திருப்பதாக அவைத் தலைவர் துரைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.