திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் காரும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரசேகர் , சித்ரா , இளவரசன், அரிவித்ரா மற்றும் குழந்தை சாக்சி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் சார்பில் தம்பதியினர் 60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காரும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
previous post