சென்னை: திருப்பத்தூர் கோணமேடு நகராட்சி அரசு பள்ளி மைதானத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கு தடை கோரி அமரர் கக்கன் கல்வி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பை மீறி 1997-ல் தீயணைப்பு நிலையம் கட்டப்பட்ட நிலையில் தற்போது துணை சுகாதார நிலையம் கட்டப்படுகிறது. திட்டத்தை ரத்துச் செய்ய கோரியும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் அமரர் கக்கன் கல்வி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்திருந்து.