திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை தொடங்கியது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீமஹாவிஷ்ணுவாக 4மாட வீதிகளில் அருள்பாலிப்பு, கருடசேவை நிகழ்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளதால் 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க 2,750 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து காவல்துறை பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.