ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி ஜன.24 வரை நடைபெறுகிறது. வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏப்ரலில் நடக்கும் சேவைகளுக்கான டிக்கெட்டை குலுக்கல் முறையில் பெற இணையத்தில் பதிவு செய்யலாம்.