திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது.